யாழில் விசமிகளின் ஈவிரக்கமற்ற செயல் (PHOTOS)
யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மேய்ச்சலுக்கு கட்டப்பட்ட பசு மாட்டின் கால் ஒன்றினை விசமிகள் வெட்டியுள்ளதுடன், மற்றுமொரு காலிலும் காயத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
குறித்த சம்பவம் மூளாய்,முன்கோடை பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
முன்கோடை அப்பகுதியை சேர்ந்த ஒருவர் தனது வாழ்வாதாரத்திற்காக பசு மாடுகளை வளர்த்து வரும் நிலையில் தனது பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் பசுவை மேய்ச்சலுக்காக கட்டியுள்ளார்.
துண்டாடப்பட்ட பசுவின் கால்
இதனை தொடர்ந்து மாடுகளை அவிழ்க்க சென்ற போது பசுவின் கால் ஒன்று வெட்டப்பட்ட நிலையில், மற்றுமொரு காலில் காயம் ஏற்படும் வகையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இது தொடர்பில் வட்டுக்கோட்டை கால்நடை வைத்திய அதிகாரிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன்,வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.