ஹவுதி கிளர்ச்சியாளர்களால் மீண்டும் தாக்கப்பட்ட வணிகக் கப்பல்! செங்கடலில் பதற்றம்
செங்கடலில் பயணித்த வணிகக் கப்பல் ஒன்றின் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யேமன் கடற்கரையில் இருந்து சிறிய படகுகளில் வந்த ஆயுததாரிகள் “ரொக்கெட்-ப்ரொபெல்லத்” (RPG) மற்றும் சிறிய ஆயுதங்களைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதலை நடத்தியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் தாக்குதல் காரணமாக செங்கடல் பகுதியில் கப்பல் பயணங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பயண பாதுகாப்பு அச்சுறுத்தல்
மேலும், இத்தாக்குதல் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களால் நடத்தப்பட்டதாகவும், இது கடந்த இரண்டு வாரங்களில் ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற குழுக்களால் நடத்தப்பட்ட ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுடன் தொடர்புடையதாகவும் கருதப்படுகிறது.

இந்தச் சம்பவம் செங்கடல் மற்றும் ஹார்முஸ் நீரிணையில் கடல் பயண பாதுகாப்பு அச்சுறுத்தல்களை மீண்டும் எழுப்பியுள்ளது.
[0CDGYBI ]
செவ்வாய் மீது சனியின் மூன்றாம் பார்வை... அதிர்ஷ்டத்தினை அள்ளிச் செல்லும் ராசியினர் யார்னு தெரியுமா? Manithan
சொதப்பிய மெஸ்ஸி: கடைசி நிமிடங்களில் மேஜிக்.. சுவிஸை வீழ்த்தி அர்ஜென்டினா அரையிறுதிக்கு முன்னேற்றம் News Lankasri
அவரது இரத்தத்திற்குப் பழிவாங்குவது உறுதி: தந்தையின் இறுதிச்சடங்கில் மொஜ்தபா கமேனி உருக்கம் News Lankasri