யாழ். நல்லூர் ஆலய வளாகத்தில் ஒருவர் கைது
யாழ். நல்லூர் ஆலய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் பற்றரியை திருடிய காரைநகர் வாசி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கந்த சட்டி விரத தினத்தை முன்னிட்டு நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றது.
பொலிஸ் புலனாய்வு பிரிவினர்
நல்லூர் ஆலயத்திற்கு பெருமளவில் பக்தர்கள் வருகின்ற நிலையில், நல்லூர் ஆலய வளாகத்தில் பக்தர் ஒருவரின் முச்சக்கர வண்டியில் இருந்து பற்றியை திருடியவர் யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கைது செய்யப்பட்டுள்ளதோடு திருடி முச்சக்கர வண்டியின் பற்றரியினையும் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் காரைநகர் பகுதி சேர்ந்தவர் எனவும் நீண்ட காலமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு நூதனமான திருட்டுகளில் ஈடுபட்டு வருபவர் எனவும் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்
கைது செய்யப்பட்டவர் விசாரணைகளின் பின் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
You May like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 14 மணி நேரம் முன்

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

சீனா, அமெரிக்காவிற்கு புதிய சிக்கல்., இந்தியாவின் நட்பு நாடுடன் பிரான்ஸ் Rafale ஒப்பந்தம் News Lankasri

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
