மறைந்த ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கத்தின் நினைவஞ்சலி (Video)
மறைந்த ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கத்தின் நினைவஞ்சலிக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
மறைந்த சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கத்தின் இளநிலை சட்டத்தரணிகளினால் நேற்றைய தினம் (06.08.2023) இடம்பெற்ற இந்த நினைவஞ்சலிக் கூட்டத்தில் அவரின் உருவப்படத்திற்கு சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்ட சட்டத்துறையின் வளர்ச்சிக்கு சாந்தா அபிமன்னசிங்கம் ஆற்றிய சேவைகளை நினைவுகூர்ந்தே இந்த நினைவஞ்சலிக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்
இந்த கூட்டத்தில் நீதிபதிகள், சட்டத்தரணிகள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
அவர்களுடன், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரத்ன, தவத்திரு வேலன் சுவாமிகள், சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் ஆறு திருமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறீசற்குணராஜா உள்ளிட்டடோரும் பங்கேற்றுள்ளனர்.
யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் வடக்கு வலய முன்னாள் உபதலைவருமான ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம், ஜூன் 19ஆம் திகதி தனது 77ஆவது வயதில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.








நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் மாலை திருவிழா





உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri

ஆசிய நாடொன்றிற்கு எலோன் மஸ்க் விடுத்த கடும் எச்சரிக்கை... 1 மில்லியன் மக்களை இழக்கலாம் News Lankasri

பாட்டியை காணவில்லை, க்ரிஷ் அம்மாவை கண்டுபிடிக்க மீனா சொன்ன விஷயம், சிக்கப்போகும் ரோஹினி... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
