சங்கு சைக்கிள் கூட்டணிக்கு உதவிய தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்
36 உறுப்பினர்களை கொண்ட வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் சங்கு சைக்கிள் கூட்டணிக்கு ஆட்சியை அமைத்துள்ளது.
சங்கு சைக்கிள் கூட்டணிக்குயின் வெற்றிக்கான இரகசிய வாக்கெடுப்பிற்கு தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஒருவர் உதவியதாக கூறப்படுகிறது.
இந்த விடயத்தினை வடக்கின் சில ஊடகவியளாளர்கள் தமது முகநூல் பதிவுகள் மூலம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறித்த தவிசாளர் தெரிவில் மூன்று வேட்பாளர்கள் முன்மொழியப்பட்டுள்ளனர். இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் செல்வத்திசைநாயகம் தவநாயகம் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பில் தியாகராஜா நிரோஸ் தேசிய மக்கள் சக்தி சார்பில் சிவசுப்பிரமணியம் சுகிர்தரூபன் ஆகியோர் போட்டியிட்டனர்.
இரகசிய வாக்கெடுப்பு
தவிசாளர் தெரிவை இரகசிய வாக்கெடுப்பா பகிரங்க வாக்கெடுப்பா என்பதை முடிவுசெய்வதைக் கூட பகிரங்கமாக கேட்காமல் இரகசியமான முறையில் வாக்கெடுப்பு மூலம் மேற்கொள்ள வேண்டும் என NPP கோரிய நிலையில் சட்டதிட்டங்களின் பிரகாரம் அதனை செய்யமுடியாது என உள்ளூராட்சி ஆணையாளர் நிராகரித்தார்.
அதன்பின் தவிசாளர் தெரிவு இரகசிய வாக்கெடுப்பு முறையில் மேற்கொள்வதா அல்லது பகிரங்க வாக்கெடுப்பு முறையில் இடம்பெறுவதா என உறுப்பினர்களிடத்தில் கருத்துகேட்டபோது 14 உறுப்பினர்கள் பகிரங்க வாக்கெடுப்பையும் 22 உறுப்பினர்கள் இரகசிய வாக்கெடுப்பையும் கோரினர். அதன்பிரகாரம் இரகசிய வாக்கெடுப்பு இடம்பெற்றது.
தவிசாளர் தெரிவிக்கான இரகசியவாக்கெடுப்பில் தி.நிரோஸ்- 16 வாக்குகளையும், செ.தவநாயகம்- 11 வாக்குகளையும், திசைகாட்டி - சி.சுகிர்தரூபன்- 9 வாக்குகளையும் பெற்றுக்கொண்டனர்.
இந்நிலையில் முதலாவதாக வந்தவரை விட ஏனைய இருவர்களின் வாக்குகளின் கூட்டுத் தொகையும் அதிகமாக காணப்பட்டதால் மூன்றாவதாக வந்த தேசிய மக்கள் சக்தியின் சிவசுப்பிரமணியம் சுகிர்தரூபன் போட்டியில் இருந்து நீக்கப்பட்டு ஏனைய இருவருக்கும் இரண்டாம் சுற்று வாக்கெடுப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டது.
முன்னர் வாக்கெடுப்பு நடுநிலைமை கோரிய நிலையில் இரண்டாம் சுற்று வாக்கெடுப்பை இரகசியமா பகிரங்கமா என உறுப்பினர்களிடம் கேட்காமல் பகிரங்க வாக்கெடுப்பாக நடாத்துமாறு தியாகராஜா நிரோசினால் உள்ளூராட்சி ஆணையாளரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
திருவுளச்சீட்டு முறைமூ
எனினும் அதனை உள்ளூராட்சி ஆணையாளர் மறுத்து மீண்டும் உறுப்பினர்களிடம் கேட்க தவிசாளர் தெரிவின் இரண்டாம் சுற்றில் பகிரங்க வாக்கெடுப்பு வேண்டும் என 14 உறுப்பினர்களும் இரகசிய வாக்கெடுப்பு வேண்டும் என 14 உறுப்பினர்களும் நடுநிலை என 8 உறுப்பினர்களும் கூறியுள்ளனர்.
இந்நிலையில் திருவுளச்சீட்டு முறைமூலம் இரகசிய வாக்கெடுப்பு என தீர்மானிக்கப்பட்டது.
தவிசாளர் தெரிவிற்கான இரண்டாம் சுற்று இரகசியவாக்கெடுப்பில்(28 வாக்குகள்) தி.நிரோஸ்- 15 வாக்குகளையும், செ.தவநாயகம்- 12 வாக்குகளையும் நிராகரிக்கப்பட்டதாக ஒரு வாக்கும் காணப்பட்டுள்ளது.
இந்நிலையில், தவிசாளராக தியாகராஜா நிரோஷ் தெரிவானார்.
இங்கு இரகசிய வாக்கெடுப்பிற்கு தேசிய மக்கள் சக்தியின் ஒரு உறுப்பினர் ஆதரவளிக்காது விடின் 14:13 என்ற கணக்கில் பகிரங்க வாக்கெடுப்பு இடம்பெற்றிருக்கும்.
அவ்வாறு பகிரங்க வாக்கெடுப்பு இடம்பெற்றிருந்தால் அளிக்கப்பட்ட 28 வாக்குகளில் 1 நிராகரிக்கப்பட மீதமுள்ள 27 வாக்குகளில் கட்சி தீர்மானங்களின் படி பெரும்பாலும் வீட்டிற்கு 14 வாக்குகள்(வீடு - 11, மான் -2, வீனை -1) என கட்டாயம் செலுத்தப்பட்டிருக்கும்.
மீதம் உள்ள வாக்குகளான 13 வாக்குகள் மாத்திரமே சங்கு சைக்கிள் கூட்டிற்கு கிடைத்திருக்கும்.
ஆகமொத்தத்தில் இந்த போட்டியில் வெற்றயை தீர்மானித்தவர் தேசிய மக்கள் சக்தி சார்பில் இரகசிய வாக்கெடுப்பிற்கு ஆதரவு தெரிவித்த உறுப்பினரே என கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பொருளாதாரத்திற்கு விழுந்த பேரிடி... இந்தியாவால் கடும் பாதிப்பில் காரீஃப் பயிர்கள் News Lankasri

இந்த ராசியினர் உயிர் போகும் தருணத்திலும் நேர்மை தவறமாட்டார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

போர் தொடர்பில் அப்படியே பலிக்கும் பாபா வங்காவின் கணிப்பு - ஈரான் இஸ்ரேல் போரில் வெற்றி யாருக்கு? News Lankasri
