அரசியல்வாதியாக மாறுகின்றார் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை! தயாசிறி குற்றச்சாட்டு - முக்கிய செய்திகளின் தொகுப்பு
கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அரசியல் மயப்படுத்தப்பட்டுவிட்டார் என்பதையே அவரின் பேச்சு காட்டுகின்றது என இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 4ஆம் திகதி நடைபெற்ற ஈஸ்டர் தின நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த கொழும்பு பேராயர், ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒரு கட்சியை வழி நடத்தித் தேர்தலில் வெற்றியடைவதற்கு சிறிசேனவுக்கு ஏதாவது மனசாட்சி இருக்கின்றதா? என அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக நேற்று ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே தயாசிறி ஜயசேகர இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நேரத்துக்கான மாலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு,