21ஆவது அரசியலமைப்பு சீர்த்திருத்தம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு மற்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கு இடையே இன்று விடே சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.
21ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக நீதி அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
நாடாளுமன்ற கட்டட தொகுதியில் இன்று இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
பிரதமர் செயலகத்தில் மற்றுமொரு கலந்துரையாடல்
இதனிடையே, 21ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் மற்றும் பிரதமர் இடையே நாளை(03) கலந்துரையாடலொன்று நடத்தப்படவுள்ளது.
பிரதமர் செயலகத்தில் நாளை(03) மாலை 04 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.