சபாநாயகருடன் முக்கிய சந்திப்பில் ஈடுபடவுள்ள சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள்
ஆளும் கட்சியிலிருந்து விலகி நாடாளுமன்றில் சுயாதீனமாகச் செயற்படும் 11 கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும், சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது.
நாடாளுமன்றில் ஆசனங்களின் ஒழுங்குப்படுத்தல்கள் தொடர்பில் இதன்போது சபாநாயகருக்கு யோசனை முன்வைக்கவுள்ளதாகக் கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் தற்போது நாடாளுமன்றில் சுயாதீனமாகச் செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் அமர்வது தொடர்பில் இதன்போது இறுதி தீர்மானம் எட்டப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் தயாசிறி ஜயசேகர, மகிந்த அமரவீர, துமிந்த திஸாநாயக்க, லசந்த அழகிய வண்ணவுடன், விமல் வீரவங்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, சுசில் பிரேம ஜயந்த மற்றும் அநுர பிரியதர்சன யாப்பா ஆகியோர் ஏனைய கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி இன்றைய சந்திப்பில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 1ஆம் திகதிக்கு முன் இந்த 9 பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர செய்தி News Lankasri
கடை திறக்க போராடும் ஜனனி, ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த நடிகை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam