தேர்தல் ஆணைக்குழுவிற்கும் கட்சி செயலாளர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு
தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் பிரதிநிதிகளுக்கும், அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பு நடைபெறவுள்ளது.
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடாபில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் பிரதான காரியாலயத்தில் இன்று முற்பகல் 10.30 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.
எல்பிட்டிய பிரதேச சபை தவிர்ந்த நாட்டின் 340 உள்ளுராட்சி மன்றங்களிலும் தேர்தல் நடாத்தப்பட உள்ளது.
சில அரசியல் கட்சிகளும், சுயாதீனக்குழுக்களும் ஏற்கனவே தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.