ரணில் விக்ரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் இடையே சந்திப்பு
முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சிகள் பலவற்றின் தலைவர்களுக்கும் இடையே நேற்று(10.10.2025) விசேட கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.
கொழும்பு ப்ளவர் வீதியில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகத்தில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.
பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைவர் அனுர பிரியதர்ஷன யாப்பா, பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சஞ்சீவ எதிரிமன்ன மற்றும் பலர் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
அரசியல் நிலைமை
தற்போதைய அரசாங்கம் நவம்பர் மாத நடுப்பகுதியில் ஒரு வருடத்தை நிறைவு செய்யவுள்ள நிலையில், அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்படும் போராட்டம் குறித்து விவாதிக்க இந்தக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
அதன்படி, அடுத்த மாதம் அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்படவுள்ள போராட்ட அமைப்பு நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

சீனா மீது திரும்பிய ட்ரம்பின் கோபம்... ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு ரத்தாகும் என மிரட்டல் News Lankasri

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam
