மருந்துகளுக்காக சர்வதேச அமைப்புகளை நாடியுள்ள அரசாங்கம்! விலையை அதிகரிக்க கோரும் இறக்குமதியாளர!
உடனடியாக மருத்துவப் பொருட்களைப் பெறுவதற்கு உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றின் உதவியை இலங்கை அரசாங்கம் நாடியுள்ளது.
அத்தியாவசிய மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு உலக வங்கியிடமிருந்து 40 மில்லியன் அமெரிக்க டொலர்களை உடனடி உதவியாக அரசாங்கம் கோரியுள்ளதாக மருந்துப் பொருட்கள் உற்பத்தி,ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
நிலவும் அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக, அமைச்சகத்தால் ஒரு வாரத்திற்கும் மேலாக அத்தியாவசிய மருந்துகளின் இருப்புக்களை விநியோகிக்க முடியவில்லை.
அத்துடன் டொலர் தட்டுப்பாடு காரணமாக இறக்குமதியாளர்களால் கடன் கடிதங்களை திறக்க முடியவில்லை.
இந்தநிலையில் உடனடி நிவாரணப் பொதியை வழங்கத் தயாராக இருப்பதாக உலக வங்கி பதிலளித்துள்ளது.
இதன்படி தேவைகள் மற்றும் எவ்வளவு பணம் தேவை என்பதை சமர்ப்பிக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் அது கேட்டுள்ளது.
இதேவேளை இலங்கைஅரசாங்கத்தின் கோரிக்கை தொடர்பாக ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றிடம் இருந்து சாதகமான பதிலை எதிர்பார்ப்பதாக ஜெயசுமண கூறியுள்ளார்.
இந்திய கடன் தி;ட்டம் மூலம் மருந்துகளை பெற்றுக்கொள்வதற்கு இன்னும் சில காலம் எடுக்கும் என்று அமைச்சர் கூறினார்.
ஆரம்பத்தில் 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை கோரியபோதும், இப்போது அதை 300 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்த்துமாறு கேட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், மருந்து இறக்குமதியாளர்கள் 60 மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலையை உயர்த்துமாறு கேட்டுள்ளனர்;.
கடந்த மாதம், இந்த 60 மருந்துகளின் விலைகள் வர்த்தமானி மூலம் 29வீதம் அதிகரிக்கப்பட்டது, மேலும் அத்தியாவசியமற்ற மருந்துகளின் விலையும் அதே அளவு உயர்த்தப்பட்டது.
கடந்த சில வாரங்களாக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்து வருவதால், இந்த மருந்துகளின் விலையை மேலும் அதிகரிக்க மருந்து இறக்குமதியாளர்கள் இப்போது கோரிக்கை விடுத்துள்ளனர்..

விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே ஒரு பயணி.., 11ஏ இருக்கையில் இருந்து தப்பித்தது எப்படி? News Lankasri

ஏர் இந்தியா துயர சம்பவம்... ஒரு வாரத்திற்கு முன்பே விமான விபத்தை கணித்த இந்திய ஜோதிடர் News Lankasri
