அரச மருந்தாளுனர் சங்கம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு
தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையகத்தின், பல முக்கிய ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக அரசு மருந்தாளுனர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த ஆவணங்களை அழிப்பதில் ஆணையகத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி, விஜித் குணசேகரவின் பங்கு இருப்பதாக, அதன் தலைவர் துஷார ரணதேவ, குற்றம் சுமத்தியுள்ளார்.
தரம் குறைந்த மருந்துகள்
முதலாம் திகதி இரவு, தலைமை நிர்வாக அதிகாரி, ஆணையக வளாகத்திற்குச் சென்று காகித கட்டர் மூலம் சில கோப்புகளை அகற்றியதாகவும் இந்த கோப்புகள் பைகளில் வைக்கப்பட்டுள்ளதாகவும் துஷார ரணதேவ கூறியுள்ளார்.
தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையகத்தின் முன்னாள் தலைவரும் தற்போதைய பிரதம நிறைவேற்று அதிகாரியுமான வைத்தியர் விஜித் குணசேகர, அண்மைக் காலமாக தரம் குறைந்த மருந்துகளின் வருகை தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

அந்தரத்தில் பறந்தபடி என்னோடு நீ இருந்தால் பாடல் பாடி அசத்திய ஷிவானி.. சரிகமப சீசன் 5ல் அசந்துபோன நடுவர்கள் Cineulagam
