அரசுக்கும் முதலீட்டாளர்களுக்கும் இடையிலான மோதல்களை மத்தியஸ்தம் செய்யும் புதிய அமைப்பு
பாதிக்கப்பட்ட தரப்பினரால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு முன்னர், அரசுக்கும் முதலீட்டாளர்களுக்கும் இடையிலான மோதல்களை மத்தியஸ்தம் செய்யவும், விசாரிக்கவும், தீர்க்கவும், ஓய்வுபெற்ற நீதிபதிகளைக் கொண்ட தேசிய முதலீட்டு பாதுகாப்பு சபையை அமைக்க அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.
இந்த திட்டம் முதலீட்டு பாதுகாப்பு சட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இது அடுத்த இரண்டு மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
நோக்கம்
இது உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இருவருக்குமே சொந்தமான முதலீடுகள் மற்றும் நிறுவனங்களை தன்னிச்சையான தேசியமயமாக்கலுக்கு எதிராகப் பாதுகாக்கும் நோக்கத்துடன் செயற்படும்.
முதலீட்டாளர்களின் நம்பிக்கையை உயர்த்துவதையும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை அதிக அளவில் ஈர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

மக்கள் பணத்தில் பிறந்தநாள் கொண்டாடியுள்ள நாமல்! அம்பலமாகியுள்ள ராஜபக்சர்களின் சித்து விளையாட்டுக்கள்.
இந்த ஆண்டு இலங்கை 1 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டைப் பெற்றிருந்தாலும், சட்ட மோதல்களுக்கு வழிவகுக்கும் கொள்கைகள் இல்லாதது போன்ற தடைகளை நீக்குவதன் மூலம் அந்தத் தொகையை அதிகரிக்க முடியும் என்று திறைசேரி தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |