பெண் ஊடகவியலாளர்கள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை - ஊடக அமைச்சு
இலங்கையில் பணியின் போது துன்புறுத்தப்பட்டதாக, பெண் ஊடகவியலாளர்கள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் விசாரணை செய்யப்படவுள்ளன.
இலங்கையின் ஊடக அமைச்சு இதனை அறிவித்துள்ளது.
ஒரு சில பெண் ஊடகவியலாளர்கள் தாம், சிரேஷ்ட ஆண் ஊடகவியலாளர்களால் பணியிடத்தில் துன்புறுத்தப்பட்டதாக சமூக ஊடகங்களில் முறையிட்டதை அடுத்து இது குறித்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இது குறித்து ஊடக அமைச்சு விசாரணையை ஆரம்பிக்கும் என்றும் அவர்
கூறியுள்ளார்.