இலங்கை அகதிகளை மீள நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை:இலங்கையின் வெளிவிவகார அமைச்சு
பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தியப் பெருங்கடல் தீவான டியாகோ கார்சியாவில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகளை மீள நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
டியாகோ கார்சியாவில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகளின் நிலைமை தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி
ருவாண்டாவுடன் பிரித்தானியா செய்துக்கொண்டுள்ள உடன்படிக்கையின் கீழ் இந்த அகதிகள் ருவாண்டாவுக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் இதனை ஏற்றுக்கொள்ளாத அகதிகள் தமது உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு சென்று அங்கிருந்து கனடா செல்ல முற்பட்ட போது தாம் பயணித்த படகில் இயந்திர பிரச்சினை ஏற்பட்டதாகவும், இதன் காரணமாகவே டியாகோ கார்சியாவில் தஞ்சம் கோரியதாகவும் இந்த அகதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதுவரை 9 பேர் வரை தமது உயிரை மாய்த்துக்கொள்ளும் முயற்சியை மேற்கொண்டதாகவும் அதில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் இதுவரை தகவல்கள் கிடைத்துள்ளன.
இலங்கையர்கள் தொடர்பில் தகவல்
இந்தநிலையில் கருத்து வெளியிட்டுள்ள இலங்கை வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் டியாகோ கார்சியா தீவில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டார்.
அவர்களை மீள இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பில் பிரித்தானிய அதிகாரிகளுடன்
இலங்கை அதிகாரிகள் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்
குறிப்பிட்டார்.

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri
