யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் எதிர்ப்பால் இடைநிறுத்தப்பட்ட நில அளவீடு(photos)
யாழ்ப்பாணத்தில் காரைநகர் பகுதியில் பொதுமக்கள் மற்றும் பொது அமைப்புகளின் எதிர்ப்பால் காணி சுவீகரிப்பிற்கான அளவீடு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
காணி
காரைநகர் தெற்கு பகுதி j/44 கிராம அலுவலர் பிரிவில் உள்ள மடத்துவெளியில் அமைந்துள்ள தனியார் ஒருவரின் சொந்த காணியை, கடற்படையினருக்கு அளப்பதற்கு முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
கடற்படை தளத்தினை விஸ்தரிப்பு செய்வதற்காக சுமார் 11 ஏக்கர் அளவிலான அந்த காணியினை அளவிட நேற்று காலை 9 மணியளவில் நில அளவைத் திணைக்களத்தினர் வருகை தந்துள்ளனர்.

இடைநிறுத்தம்
அரசியல் பிரமுகர்கள், சமூகமட்ட அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இணைந்து இந்த நில அளவீட்டுக்கு தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
மேலும், எதிர்ப்பு தெரிவித்தவர்களின் எழுத்துமூலமான ஆவணத்தினை திணைக்களத்தினர் பெற்றுக் கொண்டதுடன் இந்த நடவடிக்கை முறியடிக்கபட்டுள்ளது.

இதனையடுத்து நில அளவீடு செய்வதற்காக வந்த திணைக்களத்தினர் திரும்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ். எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தாக்கப்பட்ட இளைஞர் பரிதாப மரணம் |
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கபில சந்திரசேனவின் திடீர் மரணத்தில் தொடரும் மர்மம் - தனியார் வைத்தியசாலையின் செவிலியர் வழங்கிய வாக்குமூலம்
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam