மன்னார் மடுத்தாயாரின் திருச் சொரூப தபால் முத்திரை வெளியீடு
மடுத்தாயாரின் திருச்சொரூபத்திற்கு மணிமுடி சூடிய நூற்றாண்டு விழாவையொட்டி நினைவு தபால் முத்திரை வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
மடு அன்னையின் திரு உருவம் பொறிக்கப்பட்ட முத்திரையே இவ்வாறு வெளியீடு செய்யப்பட்டள்ளது.
மன்னார் மடு அன்னையின் ஆடி மாதம் திருவிழா நாளை(02.07.2024) கொண்டாடப்படவுள்ளது.
விசேட முத்திரை வெளியீடு
இந்நிலையில், மடு அன்னை அரசியாக முடி சூட்டப்பட்டதன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மடு அன்னையின் திரு உருவம் பொறிக்கப்பட்ட முத்திரை இன்று(01) மடு திருத்தலத்தில் வைத்து வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.அன்ரனி ஞானப்பிரகாசம் அடிகளாரின் ஏற்பாட்டில் இன்று(01) முற்பகல் நடைபெற்றுள்ளது.
தபால் மா அதிபர் ரூவன் சத்குமாரவினால் விசேட முத்திரை மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், தபால் திணைக்கள அதிகாரிகள், கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் சத்துரி பிந்து மற்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.