கனடாவுக்கு அனுப்புவதாகக்கூறி பெருந்தொகை பண மோசடி! யாழில் பெண்ணொருவரின் மோசமான செயல்
யாழ்ப்பாணம், இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டத்தரிப்பு - வடலியடைப்பு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கனடாவுக்கு அனுப்புவதாகக் கூறி 99 இலட்சம் ரூபாவை மோசடி செய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் இன்று (22) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சண்டிலிப்பாய் மற்றும் சங்கானை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருவரிடம் கனடாவுக்கு அனுப்புவதாகக் கூறி பெறப்பட்ட 99 இலட்சத்து 35 ஆயிரம் ரூபா பணம் இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளது.

பொலிஸார் தீவிர விசாரணை
குறித்த பெண் ஒருவரிடம் 55 இலட்சம் ரூபாவையும், மற்றவரிடம் 44 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாவையும் பெற்றுள்ளதாக மேற்படி முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் இவ்வாறு பணம் பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 1 மணி நேரம் முன்
பிரிட்டிஷ் ராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல்: பின்னணியில் ரஷ்யாவின் சதியா? பிரித்தானியா சந்தேகம் News Lankasri
25 ஆண்டுகளாக பெண்ணை வீட்டு சிறையில் அடைத்து வைத்த பிரித்தானிய பெண்: நீதிமன்றம் வழங்கிய தண்டனை News Lankasri
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri