கொழும்பில் பாரிய காணி மோசடி அம்பலம்
பொரளை, கோட்டை வீதியில் அமைந்துள்ள காணியொன்றை மோசடியான முறையில் விற்பனை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
136 மில்லியன் ரூபாய் நிதி முறைகேடு செய்த குற்றச்சாட்டில், ராஜகிரியவைச் சேர்ந்த 55 வயதுடைய நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
87.5 பேர்ச் காணியை போலிப் பத்திரம் மூலம் விற்பனை செய்தமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Hultsdorf இலக்கம் 2 நீதவான் நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், சந்தேக நபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
தவெக பல தொகுதிகளில் முன்னிலை வகித்தாலும்..! 10 தொகுதிகளின் நிலவரம் - இறுதி முடிவுகளில் மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு
அதிரவைக்கும் வாக்கு எண்ணிக்கை..! முன்னிலை வகிக்கும் தவெக - வேட்பாளர்களை பாதுகாக்க விஜய் அவசர ஏற்பாடுகள்