அரச கடன் தொகை குறித்து இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு
இலங்கையில் அரச கடன் தொகை பாரியளவில் உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வெளியான புதிய அறிக்கை
இலங்கை மத்திய வங்கி இது தொடர்பில் புதிய அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், இந்த ஆண்டு ஆரம்பம் முதல் ஏப்ரல் மாத நிறைவு வரையிலான காலப்பகுதியில் அரசாங்கத்தின் கடன் தொகையானது 5720.7 பில்லியன் ரூபாவினால் அதிகரித்துள்ளது.

இதன்படி இந்த ஆண்டு ஆரம்பத்தில் அரசாங்கத்தின் மொத்தக் கடன் தொகை 17589.4 பில்லியன் டொலர்களாக காணப்பட்டது.
கடன் தொகை உயர்வு
இந்த தொகையானது ஏப்ரல் மாதமளவில் 23310.1 பில்லியன் ரூபாவாக உயர்வடைந்துள்ளது.
அரசாங்க கடன் தொகையின் உள்நாட்டு கடன் தொகையின் அளவு 12442.3 பில்லியன் ரூபா.

இது 1345 பில்லியன் ரூபாவினால் உயர்வடைந்துள்ளது. வெளிநாட்டுக் கடன் 4375.6 பில்லியன் ரூபாவினால் உயர்வடைந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா கனடாவின் கூட்டாளர் அல்ல... ரஷ்யாவைவிட மிகப்பெரிய அச்சுறுத்தல்: ஆய்வு முடிவுகள் News Lankasri
கடைசி போட்டியில் இமாலய வெற்றி! மீண்டும் உலகக்கிண்ணத்திற்கு தயாராக வருவோம் - ரஷித் கான் News Lankasri
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan