யாழில் பல்பொருள் விற்பனை கடை தீயில் எரிந்ததால் பாரிய சேதம்!
Jaffna
Sri Lanka Police Investigation
Fire
By Kajinthan
யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று வடக்கு பகுதியில் உள்ள பல்பொருள் விற்பனை கடையின் உட்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதால் தளபாடங்கள் மற்றும் சரக்குகள் என்பன சேதமாகியுள்ளன.
குறித்த சம்பவமானது நேற்றையதினம்(15) இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கடை உரிமையாளர் நேற்றையதினம் கடையினை பூட்டிவிட்டு சென்று, மீண்டும் இன்றையதினம்(16) காலை வியாபார நடவடிக்கைகளுக்காக கடையினை திறந்தபோது கடையின் உட்பகுதி முழுவதும் எரிந்து உள்ளதை அவதானித்து உள்ளார்.
அதன் பின் குறித்த சம்பவம் தொடர்பான முறைப்பாட்டினை மருதங்கேணி பொலிஸாரிடம் பதிவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US