நுவரெலியாவில் மாபெரும் இரத்ததான முகாம்
நுவரெலியாவில் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியம் (EMPLOYEES' TRUST FUND BOARD) கிளையின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் இடம்பெற்றது.
குறித்த இரத்ததான முகாம் நுவரெலியா பொது நூலகம் கேட்போர் கூட மண்டபத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை (28.06.2025) காலை 9 மணி முதல் மாலை 3 வரை நடாத்தப்பட்டது.
குறித்த நிகழ்வில் அரச அதிகாரிகள் இளைஞர், யுவதிகள் உட்பட பலர் கலந்து கொண்டு இரத்த தானம் செய்துள்ளனர்.
இரத்த மாதிரிகள் சேகரிப்பு
நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட இந்த இரத்த தான நிகழ்வில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவு வைத்தியர், தாதிய உத்தியோகத்தர்கள் வருகை தந்து இரத்த மாதிரிகளை சேகரித்துள்ளனர்.
இதன்போது குருதிக்கொடை வழங்கிய கொடையாளிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.






