களுத்துறையில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு
களுத்துறை - ஹிங்குராக்கொடை பகுதியில் அனைத்து நுண்கடன்களையும் இரத்துச் செய்யக்கோரி மாபெரும் கவனஈர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
வடகிழக்கு உட்பட இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து ஒன்று கூடிய மக்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் உட்பட பல்வேறு பொது அமைப்புகள் இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்தது.
இதன்போது ஹிங்குராக்கொடை பிரதான வீதியூடாக கவனஈர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டதன் காரணமாகக் குறித்த வீதியின் போக்குவரத்துகள் சில மணி நேரம் பாதிக்கப்பட்டுள்ளது.
நுண்கடனால் தினமும் பெருமளவான பெண்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குச் செல்வதன் காரணமாக நுண்கடன் திட்டத்தினை இரத்துச்செய்ய வேண்டும் என இதன்போது கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
எனவே பெண்களைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் இந்த நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்க வேண்டும் எனவும் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டன.
நுண்கடன் திட்டத்தினை ரத்துச்செய்ய கோரும் வகையிலான பதாகைகளை ஏந்தியிருந்ததுடன், அது தொடர்பான கோசங்களையும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எழுப்பியுள்ளனர்.