தொடருந்தில் சுற்றுலா பயணிகளுக்கு மசாஜ்! சர்ச்சையை ஏற்படுத்திய காணொளி
இலங்கையின் பணியாளர் குழு ஒன்று வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு மசாஜ் சிகிச்சை செய்வதைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றமை முகம் சுழிக்கும் வகையில் உள்ளது என இலங்கை தொடருந்து பொது மேலாளர் ஜே.ஐ.டி. ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.
இன்று (17.01.2025) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், "ஒரு இலங்கையர் மற்றும் தொடருந்து துறையின் ஊழியர் என்ற முறையில், இந்த சம்பவத்தை நான் மிகவும் அவமானகரமானதாகக் கருதுகிறேன்.
சிறப்பு தொடருந்து
மேலும், தனக்குக் கிடைத்த அறிக்கைகளின் அடிப்படையில், இந்த சம்பவம் இலங்கை தொடருந்து திணைக்களத்தால் இயக்கப்படும் வழக்கமான பயணிகள் தொடருந்தில் நடக்கவில்லை, மாறாக ஒரு தனியார் பயண நிறுவனத்தால் வாடகைக்கு எடுக்கப்பட்ட சிறப்பு தொடருந்தில் நடந்துள்ளது.

இந்த சம்பவம், கொழும்பு - பதுளைக்கான விசேட சுற்றுலா தொடருந்தான ஒடிஸி, உடரட மணிக்கே அல்லது பொடி மணிக்கே போன்ற வழக்கமான தொடருந்துகளில் நடக்கவில்லை.
சுற்றுலா தொடர்பான நடவடிக்கைகளுக்காக தனியார் நிறுவனங்கள் தொடருந்து திணைக்களத்தில் இருந்து தொடருந்துகளை வாடகைக்கு எடுக்க அனுமதிக்கப்படுகின்றன. இந்த குறிப்பிட்ட சம்பவம் அத்தகைய ஒரு நிறுவனத்தால் வாடகைக்கு எடுக்கப்பட்ட தொடருந்து ஒன்றில் தான் நடந்துள்ளது.

இந்த விடயத்தை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மேலும், விசாரணை நடத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் சுற்றுலாத்துறை பொலிஸாருக்கும் அறிவிக்கப்படும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நிகழாமல் தடுக்க உடனடி நடவடிக்கை எடுப்போம்.
குறித்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே, விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. மேலும் பொறுப்பான தரப்பினரிடமிருந்து ஏற்படும் இழப்புக்களை நாங்கள் மீட்டெடுப்போம். கூடுதல் சட்ட நடவடிக்கைகளும் தொடரப்படும்" என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 21 மணி நேரம் முன்
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி-மணிரத்னம் பட வியாபாரம் முடிந்தது... இத்தனை கோடியா? Cineulagam
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam