மருதோடை கந்தசாமி கோவில் மஹா கும்பாபிசேகம்
வவுனியா(Vavuniya) - ஓமந்தை மருதோடை பகுதியில் அமைந்துள்ள கந்தசாமி கோவில் போரிற்கு பின்னர் தற்போது புனராவர்த்தனம் செய்யப்பட்டு மஹாகும்பாபிஷேகம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நீண்ட தொன்மை வரலாற்று கொண்ட குறித்த கோயிலானது கதிர்காமம் பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்கள் தங்கி இளைப்பாறி செல்லும் முருக தலமாக காணப்படுகின்றது.
கும்பாபிஷேக நிகழ்வு
கும்பாபிஷேகத்தின் ஆரம்பமாக இன்று (07) கர்மாரம்ப கிரியைகள் இடம்பெற்று நாளை(08) எண்ணைய் காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
அத்துடன், நாளை மறுநாள் 09ஆம் திகதி அன்று கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதை தொடர்ந்து 15 நாட்கள் மண்டலாபிசேகம் நடைபெறவுள்ளது.