தியாகிகள் தின 32வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிப்பு(Photo)
தியாகிகள் தின 32 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று(19) காலை மன்னாரில் நினைவு கூறப்பட்டுள்ளது.
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கட்சியின் மாவட்ட அமைப்பாளர், மன்னார் நகர சபை உறுப்பினருமான எஸ்.ஆர்.குமரேஸ் தலைமையில் கட்சியின் மன்னார் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
நினைவேந்தல்
குறித்த நினைவேந்தல் நிகழ்வில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஞா.குணசீலன், TELO பொறுப்பாளர் மோகன், கட்சியின் மத்திய குழு உறுப்பினர் அ.யூட் குரூஸ் ஆகியோர் விசேடமாக கலந்துகொண்டு தியாகிகளின் உருவ படத்திற்கு சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
அஞ்சலி செலுத்தல்
இதன் போது கட்சியின் தோழர்கள், குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டு அஞ்சலிகளை செலுத்தியுள்ளனர்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 2 மணி நேரம் முன்

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri
