ஹம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து கடற்படையினர் விலக்கப்படமாட்டார்கள் - இலங்கை அரசாங்கம் அறிவிப்பு
சீனாவின் நிதியுதவியில் அமைக்கப்பட்டுள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து கடற்படையினர் விலக்கிக்கொள்ளப்படமாட்டார்கள் என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச,சீன ஜனாதிபதியிடம் தமது நிலைப்பாட்டை விளக்கியுள்ளதாக அமைச்சரவையின் இணைப்பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
2017ஆம் ஆண்டு டிசம்பரில் செய்துக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் படி ஹம்பாந்தோட்டை
துறைமுகத்தின் செயற்பாடுகள் சீனாவின் சர்வதேச துறைமுகக்குழுவுக்கும், ஹம்பாந்தோட்டை துறைமுகச்சேவைகள் நிறுவனத்துக்கும் கையளிக்கப்பட்டது.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு கையளித்த நிலையில் இந்தியா தமது பாதுகாப்பு தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

இந்தியாவில் Audi A9 காரை வைத்துள்ள ஒரே பெண்! நீதா அம்பானியின் விலையுர்ந்த கார் கலெக்ஷன் இதோ News Lankasri

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
