இந்தியா செல்ல முயன்ற பலர் கடற்படையினரால் கைது (Photos)
மன்னாரிலிருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்குப் படகில் சென்ற 14 நபர்களை தாழ்வுபாடு கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
திருகோணமலையைச் சேர்ந்த 7 சிறுவர்கள், 3 பெண்கள், 2 ஆண்கள் உள்ளடங்கலாக 12 நபர்கள் மற்றும் மன்னாரைச் சேர்ந்த இரு படகோட்டிகளுமே இவ்வாறு இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 14 பேரும் இன்று காலை 5 மணியளவில் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
விசாரணைகளின் பின் இரண்டு படகோட்டிகள் உள்ளடங்கலாக 14 பேரும் மன்னார்
நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.