பிரித்தானியா செல்ல முற்பட்ட அகதிகளுக்கு ஏற்பட்ட நிலை! 31 பேர் வரையில் பலி
படகு மூலம் பிரித்தானியா செல்ல முற்பட்ட அகதிகள் நீரில் மூழ்கில் 31 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இங்கிலாந்தை அடைய முயன்றபோது ஆங்கிலக் கால்வாயில் படகு மூழ்கியதில் இவ்வாறு அகதிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் நிலைமைக்கு பதிலளிக்கும் வகையில் கோப்ரா அவசர குழுவின் கூட்டத்திற்கு தலைமை தாங்குவார் என்று டவுனிங் ஸ்ட்ரீட் செய்திகள் தெரிவிக்கின்றன.
குறைந்தது 30 புலம்பெயர்ந்தோர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை தான் ‘அதிர்ச்சியும், திகைப்பும், ஆழ்ந்த வருத்தமும் அடைந்ததாக’ பிரதமர் போரிஸ் ஜோன்சன் கூறியுள்ளார்.
சட்ட விரோதமான முறையில் பிரித்தானியாவை அடைய முயலும் புலம்பெயர்ந்தோர் சம்பந்தப்பட்ட மிக மோசமான விபத்து இது என்று நம்பப்படுகிறது.
ஏமன், எரித்திரியா, சாட், ஈராக், ஈரான் மற்றும் எகிப்து போன்ற நாடுகளில் இருந்து வந்த அகதிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் இடம்பெற்ற பகுதியில் இருந்து ஒரு மீட்புக் கப்பல் கலேஸ் துறைமுகத்திற்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்தவர்களில் சிலரின் உடல்களை கப்பல் ஏற்றி வந்துள்ளதாக நம்பப்படுகின்றது. ஐந்து பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட பலி எண்ணிக்கை இப்போது 31 ஐ எட்டியுள்ளது.
You My Like This Video
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 14 மணி நேரம் முன்
பண பிரச்சனையை தீர்த்த அண்ணாமலை, ஆனால் கடைசியில் மனோஜ்-ரோஹினிக்கு ஷாக்... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri