ஜே.வி.பியின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் வேட்பாளர் மீது மனுச நாணயக்கார குற்றச்சாட்டு (video)
மக்கள் விடுதலை முன்னணி கட்சியில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர் ஒருவர் மக்களை ஒன்று திரட்டி சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு அனுப்புகின்றார் என வேலைவாய்ப்பு அமைச்சர் மனுச நாணயக்கார குற்றம் சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (25.03.2023) உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், இவ்வாறனவர்கள்தான் பெண்களின் உயிர்களுக்கு உத்தரவாதம் இல்லாத நிலையை ஏற்படுத்தியுள்ளனர்.
பொருளாதார நெருக்கடி
இந்நிலையில் படகு மூலம் மட்டுமல்லாமல், விமான நிலையம் ஊடாகவும் போலியான விசாக்கள் மூலமாகவும், இந்தியாவிற்கு சென்று அங்கிருந்து போலி ஆவணங்களை தயாரித்து சட்டவிரோத வெளிநாட்டு பயணங்களை போலி முகவர்கள் முன்னெடுக்கின்றனர்.
பொருளாதார நெருக்கடி காரணமாகவே வெளிநாடு செல்ல தயாராகுபவர்கள் போலி முகவர்களின் பிடிக்குள் மாட்டிக்கொள்கின்றார்கள் இதற்கான நடவடிக்கையை அரசாங்கம் எடுத்துள்ளது.
இவ்வாறு நாட்டிலுள்ள பெண்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் சட்டவிரோதமாக வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.