தமிழர்களின் வரலாற்றில் இருக்கும் விடயம்! வெளிப்படுத்தும் மனோ கணேசன் (Video)
தமிழ் மக்களை பொறுத்தமட்டில் வரலாறு முழுக்க தவறவிட்ட வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அந்த அடிப்படையில் வாய்ப்புகளை தவறவிட நாங்கள் தயாராக இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற அடிப்படையில் நாங்கள் எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்துகிறோம்.
எங்கள் மக்களின் பிரச்சினைகளை, துன்பங்களை, துயரங்களை சொல்லக்கூடிய வாய்ப்புகள் வந்தால் சொல்லியே தீருவோம், குரல் கொடுத்தே தீருவோம் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் இருக்கின்றோம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
பணம் திருடியதால் ஜெயிலில் அடிவாங்கிய சோழன், நிலா உடனே செய்த காரியம்.. அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை உருவாக்கும் பாகிஸ்தான் - உளவுத்துறை எச்சரிக்கை News Lankasri