மன்னார் காற்றாலை திட்டம்! ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்

Mannar Anura Kumara Dissanayaka President of Sri lanka
By Thileepan Aug 14, 2025 01:49 AM GMT
Report

மன்னார் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் தொடர்பில் மக்களுக்கு தெளிவூட்ட ஒரு மாதகால அவகாசம் ஜனாதிபதி வழங்கியுள்ளார் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (13) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியுடன் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் மன்னார் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் மற்றும் இல்மனைட் அகழ்வு தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.

நீதிபதி இளஞ்செழியனுக்கு பாதுகாப்பு வழங்கிய ஆயர் இராயப்பு ஜோசப்

நீதிபதி இளஞ்செழியனுக்கு பாதுகாப்பு வழங்கிய ஆயர் இராயப்பு ஜோசப்

ஒரு மாதகால அவகாசம்

இந்த சந்திப்பை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,


இந்த சந்திப்பின் போது பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தினால் ஏற்பட போகும் பாதிப்புகள் மற்றும் இல்மனைட் அகழ்வினால் ஏற்படப்போகும் பாதிப்புக்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தி இருந்தார்கள்.

இதன்போது, ஜனாதிபதியினால் காற்றாலை மின் உற்பத்தியினால் பெறப்படுகின்ற மின்சாரத்தின் தேவை தொடர்பிலும் ஏனைய பொருட்களின் மூலமாக பெறப்படுகின்ற மின்சாரத்தினால் ஏற்படுகின்ற செலவுகள் தொடர்பிலும் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது. அத்துடன் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தை நிறுவ வேண்டிய தேவை கட்டாயமாக இருக்கிறது எனவும் தெரிவித்திருந்தார்.

இல்லையேல் 2028 ஆம் ஆண்டு மீண்டும் ஒரு மின்சார நெருக்கடியை நாடு எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் இதன்போது தெரிவித்திருந்தார்.

இதனால் ஏற்பட போகும் பாதிப்புகள் இருக்குமாயின் அது விஞ்ஞான ரீதியாக எவ்வாறான பாதிப்புகளாக அமையும் என்பது தொடர்பிலும் கரிசனையுடன் கேட்டறிந்தார்.

விரைவில் தூங்கா நகரமாக மாற்றப்படவுள்ள கண்டி

விரைவில் தூங்கா நகரமாக மாற்றப்படவுள்ள கண்டி

 காற்றாலை மின் உற்பத்தி நிலையம்

அத்துடன் அவ்வாறான பாதிப்புகள் ஏற்படுமாக இருந்தால் அதனை எவ்வாறு நிவர்த்தித்து பாதிப்புகள் ஏற்படாத வகையில் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பது தொடர்பிலும் ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு தெரிவித்திருந்தார்.

மன்னார் காற்றாலை திட்டம்! ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம் | Mannar Wind Power Plant Deadline

இது தொடர்பில் மக்களுக்கு தெளிவூட்டல்களை வழங்க வேண்டிய தேவை தொடர்பிலும் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைப்பதன் தேவை தொடர்பிலும் மக்களுக்கு தெளிவூட்டல்களை வழங்குமாறு அதிகாரிகளுக்கு பணித்திருக்கின்றார்.

அத்துடன் தற்போது அமைக்கப்பட்டு வருகின்ற 70 மெகாவோட்ஸ் மின்சாரத்துக்கு மேலதிகமாக காற்றாலைகள் மன்னார் தீவு பகுதிக்குள் அமைக்கப்படாது எனவும் மேலும் அமைக்கப்படவுள்ளதை தீவுப்பகுதிக்கு அப்பால் உள்ள பிரதேசங்களை அடையாளம் கண்டு அமைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். 

சூழலுக்கு பாதிப்பு

அத்துடன், இல்மனைட் அகழ்வு தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டிருந்தது.

இதுவரை இல்மனைட் அகழ்வுக்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை எனவும் ஏற்கனவே செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சூழல் ஆய்வுகளை மேற்கொண்டு பெறுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்திருந்ததோடு அதனை தற்காலிகமாக நிறுத்த அந்த சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவித்தல் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

மன்னார் காற்றாலை திட்டம்! ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம் | Mannar Wind Power Plant Deadline

அத்துடன் மக்களுக்கு விருப்பம் இல்லாத சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்த விடயங்களையும் செயல்படுத்த போவதில்லை என்பதையும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்திருந்தார்.

இந்த சந்திப்பில் ஜனாதிபதியுடன் மின்சக்தி எரிசத்தி அமைச்சர், சுற்றுச்சூழல் பிரதி அமைச்சர், கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, மின்சார சபையினர், காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தை அமைக்கும் நிறுவனத்தினர், வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மன்னார் மாவட்ட சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர். 

போர் நிறுத்த புடின் சம்மதிக்கவில்லை என்றால்... ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

போர் நிறுத்த புடின் சம்மதிக்கவில்லை என்றால்... ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Paris, France, London, United Kingdom

13 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Vancouver, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், ஜேர்மனி, Germany

12 Aug, 2025
அகாலமரணம்

ஏறாவூர், St. Gallen, Switzerland

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், அளவெட்டி வடக்கு, உருத்திரபுரம்

14 Aug, 2021
மரண அறிவித்தல்

காரைநகர், London, United Kingdom

12 Aug, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, Lewisham, United Kingdom, Lee, United Kingdom, Orpington, United Kingdom

10 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கரவெட்டி மேற்கு, Scarborough, Canada

12 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Toronto, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, Stanmore, United Kingdom, London, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, கோப்பாய், High Wycombe, United Kingdom

04 Aug, 2025
மரண அறிவித்தல்

முருங்கன், பிரான்ஸ், France, Croydon, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Oslo, Norway, Tours, France

03 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, பிரான்ஸ், France, London, United Kingdom

07 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொக்குவில், Wellawatte, Pinner, United Kingdom

04 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US