மன்னார் சோழமண்டலகுளம் காணி விவகாரம் குறித்து ஜனாதிபதிக்கு அவசர கடிதம்

Mannar Ranil Wickremesinghe Sri Lankan Peoples President of Sri lanka
By Kajinthan Aug 17, 2024 05:05 PM GMT
Report

மன்னார் (Mannar) - சோழமண்டலகுளத்தில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்ட காணி பணம் படைத்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தி ஜனாதிபதிக்கு அவசர கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

குறித்த முறைப்பாட்டு கடிதத்தை மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் இன்றைய தினம் (17.08.2024) அனுப்பி வைத்துள்ளார். 

இந்த கடிதத்தில், "மன்னார் - சோழமண்டலகுளம் காணி விடயம் தொடர்பாக பல முறை உங்களுக்கு கடிதம் எழுதி பயனற்று போய்விட்டன.

மட்டக்களப்பில் 5 வயது சிறுவனை கடத்தியவரை நையப்புடைத்த மக்கள்

மட்டக்களப்பில் 5 வயது சிறுவனை கடத்தியவரை நையப்புடைத்த மக்கள்

பலமுறை முறைப்பாடுகள் 

30 ஆண்டுகளாக விவசாய செய்கையில் ஈடுபட்டு வரும் 100 ஏழை விவசாயிகள் புறக்கணிக்கப்பட்டு பெரு வணிகர்களுக்கும் கொழும்பிலும் வெளிநாட்டிலும் இருப்பவர்களுக்கும் சட்டவிரோதமாக காணி வழங்கி உள்ளீர்கள்.

மன்னார் சோழமண்டலகுளம் காணி விவகாரம் குறித்து ஜனாதிபதிக்கு அவசர கடிதம் | Mannar Solamandalakulam Land Issue Letter To Ranil

நீதியின் பரிபாலனமின்றி அநீதியாக உங்கள் அமைச்சர்கள் சலுகை பெற்றுக் கொண்டு இக்காணியை வழங்கியுள்ளார்கள் என்பதே வெளிப்படையான உண்மை.

இவ்விடயம் குறித்து அரசாங்க அதிபர் பலமுறை வேண்டுகோள் விடுத்துள்ளார். இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் பல தடவைகள் எழுத்து மூலமும் நேரடியாகவும் தெரிவித்துவிட்டனர்.

இதற்காக பல கூட்டங்களும் நடந்தேறிவிட்டன. ஆனால், எங்கும் நீதி கிடைக்கவில்லை. ஏழை மக்களின் வாழ்வாதாரத்திற்கான காணியை அபகரித்தமை அடிப்படை உரிமை மீறலாகும்.

சீன திட்டங்களை தமிழ் மக்கள் ஆரோக்கியமாக பார்க்கவில்லை: சபாகுகதாஸ் தெரிவிப்பு

சீன திட்டங்களை தமிழ் மக்கள் ஆரோக்கியமாக பார்க்கவில்லை: சபாகுகதாஸ் தெரிவிப்பு

தேர்தல் புறக்கணிப்பு 

வாழ்வுரிமையின் அடிப்படை உரிமை மறுக்கும் இந்த நாட்டின் நீதியற்ற நிர்வாகவியலின் ஜனாதிபதி தேர்தலை முழுமையாக புறக்கணிக்கிறோம்.

மன்னார் சோழமண்டலகுளம் காணி விவகாரம் குறித்து ஜனாதிபதிக்கு அவசர கடிதம் | Mannar Solamandalakulam Land Issue Letter To Ranil

எந்த வேட்பாளருக்கும் நாம் வாக்களிக்க தயாராக இல்லை. எமது அடிப்படை உரிமையை பெற முடியாத இந்த நாட்டில் குடியிருந்து என்ன பயன்?

இந்த நூறு குடும்பங்களின் வாழ்வுரிமையை மறுக்கும் தங்களின் அரசால் இவர்களை இங்கிருந்து நாடு கடத்தி விடுங்கள். சமநீதி, சமத்துவம், சமூக நீதி மற்றும் அடிப்படை வாழ்வுரிமை இல்லாத நாட்டில் வசித்து என்ன பயன்?

பணம் உள்ளவர்கள் மட்டுமே வாழலாம். அவர்களுக்கு மட்டுமே இந்த அரசு சகல விடயங்களிலும் முன்னுரிமை வழங்குகின்றது. தமிழ் மக்களின் இனப் பிரச்சினை தீர்வு மட்டுமல்ல அடிப்படைப் பிரச்சினையையும் புறக்கணிக்கும் தாங்கள் எப்படி பல்வகைமைச் சமூகத்தின் தலைவராக மிளிர்ந்து விட முடியும்.

அரசியலில் களமிறங்கும் மங்களவின் உறவுக்கார பெண்

அரசியலில் களமிறங்கும் மங்களவின் உறவுக்கார பெண்

காணி பிரச்சினை

இந்த நாட்டிலே ஏதிலிகள் குடியிருந்து என்ன பயன்? அவர்களின் உரிமைகளை அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் சகல வழிகளிலும் நசுக்கி வருகிறீர்கள்.

மன்னார் சோழமண்டலகுளம் காணி விவகாரம் குறித்து ஜனாதிபதிக்கு அவசர கடிதம் | Mannar Solamandalakulam Land Issue Letter To Ranil

எனவே, உடனடியாக தேர்தலுக்கு முன்னதாகவே இந்த காணி பிரச்சினை தீர்க்கப்பட்டு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

உலகிற்கு ஜனநாயகமும், சமத்துவமும் பற்றி புத்தி புகட்டும் தாங்கள் உள்நாட்டில் சாமானியனின் ஜனநாயகத்திற்கு சாவு மணி அடிப்பது தான் நடு நிலையான ஆட்சியா?

நல்லாட்சி என்பது பாதிக்கப்பட்டவன் பக்கம் நிற்பதே. முதலாளித்துவத்திற்கு ஆதரவான அரசு பாட்டாளிவர்க்கத்தின் விரோதியே! எனவே, இப் பிரச்சினை உடனடியாக தீர்க்கப்பட வேண்டும். இல்லையேல் வரும் ஜனாதிபதி தேர்தலை நாம் முழுமையாக புறக்கணிப்போம்” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarbrough, Canada, Ontario, Canada

14 Jun, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வட்டக்கச்சி

12 Jun, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கிளிநொச்சி, Kleve, Germany

26 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம், கொழும்பு

12 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை, Toronto, Canada

14 Jun, 2023
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சுவிஸ், Switzerland

14 Jun, 2013
மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
மரண அறிவித்தல்

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, சுண்டிக்குளி, Scarborough, Canada

11 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Mantes-la-Jolie, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, கொழும்பு

09 Jun, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, திருநெல்வேலி, கொழும்பு, London, United Kingdom

07 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US