மன்னார் நகரசபைக்குள் புகுந்து அரச சேவைக்கு இடையூறு விளைவித்த நபர்
மன்னார் நகர சபையினுள் புகுந்து நபர் ஒருவர் தகாத வார்த்தைகளில் அரச உத்தியோகஸ்தர் ஒருவருடன் முரண்பட்டதுடன் அச்சுறுத்தலும் விடுத்து சகோதர மொழி இனத்தை இழிவுபடுத்தியும் பேசியுள்ளார்.
மன்னார் நகரசபை எல்லைக்குள் இயங்கி வரும் தனியார் உற்பத்தி நிறுவனத்தின் உற்பத்தி பொருள் லேபில் தொடர்பில் காணப்பட்ட குறைபாடு தொடர்பில் வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கை ஒன்றை மன்னார் நகரசபை சுகாதார பரிசோதகர் மேற்கொண்டுள்ளார்.
இந்தநிலையில் குறித்த நிறுவனத்தின் உரிமையாளர் மன்னார் நகரசபை அலுவலகத்தினுல் புகுந்து அநாகரிகமாக நடந்து கொண்டதுடன் குறித்த சுகாதார பரிசோதகரையும் அச்சுறுத்தும் விதமாகவும் நடந்து கொண்டுள்ளார்.
முறைப்பாடு
அதே நேரம் குறித்த சகோதர இன சுகாதார பரிசோதகரையும் அவருடைய இனத்தையும் குறித்த நபர் இழிவாக கதைத்து அநாகரிகமாக நடந்து கொண்ட நிலையில் குறித்த நபருக்கு எதிராக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற் கொள்ளப்பட்டுள்ளது.
மன்னார் நகரசபைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட சகோதர இனத்தை சேர்ந்த சுகாதார பரிசோதகர் மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையுடன் இணைந்து அண்மைகாலமாக சுகாதார சீர்கோடுகளுடன் இயங்கி வந்த பல்வேறு உணவகங்கள் மற்றும் நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்து வருகின்ற நிலையில் அவரை அச்சுறுத்தும் விதமாக குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தை தாக்கும் ஈரான்? பதற்றத்தில் மத்திய கிழக்கு நாடுகள் News Lankasri

ஈரானின் எச்சரிக்கை., B-2 பாம்பர் விமானங்களை அனுப்பும் அமெரிக்கா - புதிய கட்டத்திற்கு செல்லும் மோதல் News Lankasri
