வீட்டின் மேல் மாடியில் கஞ்சா செடி வளர்த்த நபர் கைது(Photos)
அம்பாறையில் வீட்டில் வைத்து கஞ்சா செடி வளர்த்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் உள்ள மலையடிக்கிராமத்தில் வீடு ஒன்றின் மூன்றாவது மாடியின் மேல் கஞ்சா செடிகளை வளர்த்தவே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து இன்று பகல் குறித்த வீட்டை முற்றுகையிட்ட பொலிஸார் மாடியின் மேல் பூச்செடிகளுடன் வளர்க்கப்பட்ட கஞ்சா செடியை கண்டுபிடித்துள்ளனர்.
இந்நிலையில் இரண்டு கஞ்சா செடிகளை மீட்டுள்ளதுடன், 33 வயதுடைய வீட்டின் உரிமையாளர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிறுத்த நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.