வீடு புகுந்து பெண்களை புகைப்படம் எடுக்கும் மர்ம நபர் - அச்சத்தில் பெண்கள்
எலஹெர சருபிம கிராமத்தில் இந்த நாட்களில் மர்ம நபர் ஒருவர் வீடுகளுக்குள் நுழைந்து பெண்கள் உறங்கும் அறைகளின் ஜன்னல்களில் இருந்து படம் எடுப்பதால் பெண்கள் அச்சத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
குறித்த நபர் வீடு ஒன்றிற்குள் நுழைந்து பெண் ஒருவரை புகைப்படம் எடுத்த போது, உரிமையாளரும் கிராம மக்களும் அவரை பிடிக்க முயற்சித்தும் தோல்வியடைந்துள்ளது.
இன்றைய காலக்கட்டத்தில் அதிக பிரச்சினை மற்றும் அதிக மின் கட்டணம் காரணமாக மின் விசிறிகளை பயன்படுத்தாமல் ஜன்னல்களை திறந்து வைத்துள்ள அறைகளில் பெண்கள் உறங்குவதால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இந்த நபர் புகைப்படம் எடுப்பதாக கிராம மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதற்கு முன்னரும் இக்கிராமத்தில் உள்ள வீடொன்றில் புகுந்த திருடன், இளம்பெண் ஒருவர் உறங்கிக் கொண்டிருந்த அறைக்குள் புகுந்து சுமார் 50000 ரூபா பெறுமதியான தொலைபேசியை திருடிச் சென்றதுடன், இது தொடர்பில் பக்கமூன பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்தும் பொலிஸாரால் இதுவரை அந்த நபரை கைது செய்ய முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri