அமெரிக்காவுக்கு காத்திருக்கும் பேராபத்து: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
2025 ஆம் ஆண்டில் அமெரிக்கா பேரழிவுகளை ஏற்படுத்தும் நிகழ்வுகளை எதிர்நோக்க போகின்றது என தான் எதிர்காலத்தில் இருந்து திரும்பி வந்த காலப்பயணி (Time Traveler) என தெரிவிக்கும் நபர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
எல்விஸ் தாம்சன் (@elvis.thompson.927) என்ற இன்ஸ்டாகிராம் செயலி பயனாளர் ஒருவரே இதனை தெரிவித்துள்ளார்.
அண்மையில் குறித்த நபர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளியில் தான் 'காலப் பயணி' என்றும் 2025 ஆம் ஆண்டின் ஐந்து திகதிகளை குறிப்பிட்டு பயங்கரமான பேரழிவுகள் நடைபெறும் என்றும் கூறியுள்ளார்.
காலப்பயணி
குறித்த நபர், கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இடையில் முன்னும் பின்னுமாக பயணிக்க முடியும் என்று கூறியுள்ளதுடன் காலப் பயணம் என்பது கடந்த காலத்திற்கு அல்லது எதிர்காலத்திற்கு பயணிக்கும் திறனைக் குறிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், எதிர்காலத்தில் இருந்து திரும்பி வந்ததாக தெரிவிக்கும் அவர் இந்த ஆண்டில் அமெரிக்கா முக்கிய ஐந்து பேரழிவிற்கு உள்ளாகும் என தெரிவித்துள்ளமை சர்வதேச ரீதியில் பேசுபொருளாகியுள்ளது.
ஏப்ரல் 6
அந்நபரின் கூற்றுப்படி, ஏப்ரல் 6ஆம் திகதி, அமெரிக்காவின் ஓக்லஹோமாவில் மணிக்கு 1046 கிலோமீட்டர் வேகத்தில் 24 கிலோமீட்டர் அகலமுள்ள ஒரு சூறாவளி வீசி பேரழிவை ஏற்படுத்தும்.
மே - 27
மே 27ஆம் திகதி, அமெரிக்காவில் உள்நாட்டு போர் வெடித்து டெக்சாஸ் பிரிவினை ஏற்படுத்தும் அதேவேளை, இந்த நிகழ்வு அணு ஆயுதங்கள் தொடர்பான மோதலை தூண்டி அமெரிக்காவுக்கு அழிவு ஏற்படுத்தும்.
செப்டெம்பர் - 1
சாம்பியன் என்ற வேற்றுகிரகவாசி, செப்டம்பர் 1ஆம் திகதி, அமெரிக்காவுக்கு வருகை தருவர். அதாவது இந்த வேற்றுகிரகவாசி தங்களது பாதுகாப்புக்காக12,000 மனிதர்களை மற்றொரு மக்கள் வசிக்கும் கிரகத்திற்கு அழைத்துச் செல்வர்.
செப்டெம்பர் - 19
அதேவேளை, செப்டம்பர் 19ஆம் திகதி அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையை பெரிய புயல் தாக்கி அழிவை ஏற்படுத்தும்.
நவம்பர் - 3
இறுதியாக நவம்பர் 3ஆம் திகதி, பசிபிக் பெருங்கடலில் செரீன் கிரவுன் என்று பெயரிடப்பட்ட ஒரு பெரிய கடல் உயிரினம் கண்டுபிடிக்கப்படும். இது நீலத் திமிங்கலத்தை விட ஆறு மடங்கு பெரிதாக இருக்கும் என்று எச்சரித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

காணி நிலம் வேண்டும் பராசக்தி 3 நாட்கள் முன்

மற்றொரு ஐரோப்பிய நாடு... 10,000 ரஷ்ய வீரர்கள்: பிரதமர் ஒருவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் News Lankasri
