மனைவியை கொலை செய்து புதைத்து விட்டு நாடகமாடிய கணவன்: விசாரணையில் பகீர் தகவல்கள்

Sri Lanka Police Galle Death
By Vethu Jul 03, 2025 06:34 AM GMT
Report

காலியில் மனைவியை கொலை செய்து வீட்டுக்கு அண்மித்த பகுதியில் புதைத்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

42 வயதான மஜுவான கமகே இந்திராணி என்ற பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் ரணசிங்க காமினி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாலச்சந்திரனின் மரணச் செய்தி கேட்டு மனமுடைந்தாராம் மகிந்த! இப்படிக் கூறுகிறார் நாமல்

பாலச்சந்திரனின் மரணச் செய்தி கேட்டு மனமுடைந்தாராம் மகிந்த! இப்படிக் கூறுகிறார் நாமல்

அடித்துக் கொலை

மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், தனது மனைவியை ஒரு கட்டையால் அடித்துக் கொலை செய்து, ஊருபொக்கவில் உள்ள வீட்டிற்கு அருகே கணவர் புதைத்துள்ளார்.

மனைவியை கொலை செய்து புதைத்து விட்டு நாடகமாடிய கணவன்: விசாரணையில் பகீர் தகவல்கள் | Man Killed Wife And Buried

பின்னர் தனது மனைவியைக் காணவில்லை என்று எல்பிட்டிய பொலிஸாரிடம் முறைப்பாடு செய்து நாடகமாடியதாக பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் 18 வயது மகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொலைச் சம்பவம் குறித்து தகவல்களை பொலிஸ் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பின்னர், சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரான ரணசிங்க காமினி என்பவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார்.

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலையான நபர் சிஐடியினருக்கு கொடுத்த அதிர்ச்சி

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலையான நபர் சிஐடியினருக்கு கொடுத்த அதிர்ச்சி

பொலிஸார் விசாரணை

விசாரணையின் போது, ​​சந்தேக நபர் சம்பவத்தை ஒப்புக்கொண்டு அனைத்து விவரங்களையும் வழங்கினார்.

மனைவியை கொலை செய்து புதைத்து விட்டு நாடகமாடிய கணவன்: விசாரணையில் பகீர் தகவல்கள் | Man Killed Wife And Buried

"எனது மனைவியை திருமணம் செய்த கிராமத்தில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்தேன். மனைவிக்கு தகாத உறவுகள் இருந்தன. இது குறித்து நான் அவரை பலமுறை எச்சரித்தேன், ஆனால் அவர் உறவை நிறுத்தவில்லை. இறுதியாக, என்னால் எதுவும் செய்ய முடியாததால், என் மனைவி மற்றும் மகளுடன் தெனியாயவின் ஊருபொக்க பகுதியில் கூலித் தொழிலாளியாக வேலைக்கு சென்றேன். ஆனால் அவர் மீண்டும் தொலைபேசியில் முன்பு உறவு வைத்திருந்தவர்களுடன் ரகசியமாக உறவு வைத்திருப்பதை அறிந்து கொண்டேன். அது குறித்து வினவிய போது ஏற்பட்ட மோதலில் அவரை தாக்கி கொலை செய்து விட்டு உடலை வீட்டிற்கு அருகில் புதைத்தேன். இந்த சம்பவம் 2024ஆம் பெப்ரவரி மாதம் நடந்தது. 4 நாட்களுக்கு பின்னர் மனைவியை காணவில்லை என பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தேன். தற்போதே பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் உடலை தோண்டி எடுப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US