மனைவியை கொலை செய்த கணவன் - உயிருக்கு ஆபத்தான நிலையில் அத்தை
கம்பஹாவில் மனைவியை கொலை செய்த கணவன், தன்னுயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மொரகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லபுனொறுவ வண்ணமடுவ பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி மனைவியை கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கூரிய ஆயுதம்
மனைவியைக் கொன்ற கணவன், தனது அத்தையையும் கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு, அவரும் தனது வீட்டின் அறையில் தூக்கிட்டுத் உயிரை மாய்த்துள்ளார்.

லபுனொறுவ வண்ணமடுவ பிரதேசத்தில் வசிக்கும் 30 வயதுடைய பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சந்தேகநபரின் வீட்டை அண்டியுள்ள வீடொன்றின் முற்றத்தில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் படுகாயமடைந்த அத்தை உடனடியாக சிகிச்சைக்காக பிரிமடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக சிகிச்சை
ஆபத்தான நிலையில் உள்ள பெண் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரகொட பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பார்த்துவிட்டு முதல் விமர்சனம் சொன்ன தெலுங்கு தயாரிப்பாளர்.. படம் எப்படி இருக்கு? Cineulagam
அந்த வலியும், வேதனையும்.. காதல் முறிவு மற்றும் காதலரால் செய்யப்பட்ட துன்புறுத்தல்களை கூறிய நடிகை அனுபமா Cineulagam