ஈபிள் கோபுரத்தில் இருந்து பாராசூட்டில் குதித்த மர்ம நபர் - செய்திகளின் தொகுப்பு
ஈபிள் கோபுரத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நேற்று முன்தினம் (17.08.2023) அதிகாலை 5 மணியளவில் ஈபிள் கோபுரம் திறக்கப்படும் முன்பே காவலர்களின் கவனத்தை திசை திருப்பி மர்ம நபர் ஒருவர் கோபுரத்தின் உள்ளே நுழைந்துள்ளார்.
சிறிது நேரத்திலேயே சிசிடிவி கேமராவின் மூலம் பாதுகாவலர்கள் அவரை பார்த்துள்ளனர்.
எனினும் கோபுரத்தின் லிப்ட்டை பயன்படுத்தி அவர் மேலே சென்றுவிட்டார். 330 மீற்றர் உயரம் கொண்ட ஈபிள் கோபுரத்தின் உச்சிக்கு சென்றதும் தனது முதுகில் மாட்டிருந்த பாராசூட் உடன் அங்கிருந்து குதித்துள்ளார்.
இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,




