இவரை கண்டால் உடன் அறிவிக்கவும்..! கொழும்பில் பட்டப்பகலில் கைவரிசையை காட்டிய போலி வங்கி அதிகாரி
கொழும்பு - கம்பெனி வீதி பொலிஸ் பிரிவில் உள்ள ஒரு பிரபலமான ஹோட்டலுக்கு வந்த நபர், ஒருவர் ஹோட்டலில் உள்ள பொருட்களை திருடிய சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் கடந்த 3 ஆம் திகதி இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹோட்டலில் நடந்த சம்பவம்
மேலும் தெரியவருகையில்,
கம்பெனி வீதி பொலிஸ் பிரிவில் உள்ள ஒரு பிரபலமான ஹோட்டலுக்கு வந்த நபர் தன்னை ஒரு தனியார் வங்கியின் அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளதுடன், இரவு உணவிற்காக ஒரு குழுவினர் வரவுள்ளதாகவும் ஹோட்டல் நிர்வாகத்தினரிடம் தெரிவித்துள்ளார்.
இதன்போது, ஹோட்டலில் இருந்து அதிக அளவு உணவு மற்றும் பானங்களை ஆர்டர் செய்துள்ளார். அதன் பின்னர், ஹோட்டல் பரபரப்பாக இருந்தபோது அந்த நபர் ஹோட்டலில் இருந்து பொருட்களைத் திருடிவிட்டு தப்பிச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஹோட்டல் நிர்வாகம் கம்பெனி வீதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளது. பொலிஸார் நடத்திய விசாரணையில், இந்த சந்தேக நபர் இதற்கு முன்னர் குருந்துவத்த, பெலியகொட மற்றும் நுகேகொட பொலிஸ் பிரிவுகளில் இதேபோன்ற திருட்டுகளில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
அவரைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடி வருகின்றனர்.
பொதுமக்கள் உதவியை நாடும் பொலிஸார்
பொலிஸார் சந்தேக நபரின் புகைப்படத்தை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளதுடன், இந்த சந்தேக நபர் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி எண்களுக்குத் தெரிவிக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

பல்வேறு சமயங்களில் சில தனிநபர்களால் செய்யப்படும் இதுபோன்ற மோசடிச் செயல்கள் பொலிஸ் நிலையங்களுக்குத் தெரிவிக்கப்படுகின்றன.
மேலும், கடைகள் மற்றும் பிற ஸ்தாபனங்களுக்கு வருகை தரும் நபர்கள் குறித்து பொதுமக்கள் முடிந்தவரை கவனமாகவும் விழிப்புடனும் இருக்குமாறு இலங்கை பொலிஸ் அறிவுறுத்துகிறது.
You may like this..
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 5 Evening