யாழில் விசாரணைக்காக பொலிஸ் நிலையம் சென்றவருக்கு நேர்ந்த கதி..!
யாழ்ப்பாணத்தில் பொலிஸ் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நபர், பொலிஸ் நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று(18.05.2026) இடம்பெற்றுள்ளது.
நாவாந்துறை பகுதியை சேர்ந்த ப. சுரேஷ்குமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக்காக சென்றவருக்கு நேர்ந்த கதி
விசாரணைக்காக நேற்றைய தினம்(18) யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலையத்திற்கு சுரேஷ்குமார் அழைக்கப்பட்ட நிலையில், பொலிஸ் நிலையத்தில் மயங்கி விழுந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து பொலிஸார், குறித்த நபரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
விபத்து ஏற்பட்டு ரத்த காயத்துடன் வலியில் துடிக்கும் தமிழ், பதறிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam