மனைவியை வீதியில் வைத்து தாக்கிய நபர்..! கடவத்தையில் குழப்பம்
கடவத்தை பகுதியில் நபரொருவர் தனது மனைவியை வீதியில் வைத்து அடித்து துன்புறுத்தும் வகையிலான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.
இந்த சம்பவம் நேற்றையதினம்(18.07.2025) இடம்பெற்றுள்ளது.
இதனை அவதானித்த சிலர் தாக்குதலை தடுக்கச் சென்றவேளை, அங்கு குழப்பகரமான நிலை ஏற்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான பெண் சரிந்து கீழே விழுந்த நிலையில், அங்கு கூடியிருந்தவர்களிடம், தன்னை தாக்கியது கணவரென்றும், அவர் தனது வயிற்றில் கடுமையாக தாக்கியதால் தான் சரிந்து விழுந்ததாகவும், வீதி முழுவதும் தன்னை அடித்து துன்புறுத்தி இழுத்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பெண்
சம்பவ இடத்தில் அதிகளவான பொதுமக்கள் ஒன்று கூடிய பிறகு, குறித்த நபர், இது தனது மனைவி எனவும், தாம் பொலன்னறுவையில் வசிப்பதாகவும் குறிப்பிட்டார்.
இதனையடுத்து, தனது மனைவியின் முகத்தில் தண்ணீர் தெளித்து, அரவணைத்து அருகில் அமர்த்திக் கொண்டுள்ளார். எனினும், அருகில் இருந்தவர்கள் குறித்த நபரை கடுமையாக வசைபாடினர்.
அதன் பின்னர், அங்கு வந்த பொலிஸார் குறித்த நபரை கடுமையாக எச்சரித்ததுடன், அவசர அம்பியூலன்ஸ் சேவைக்கு அறிவித்து பெண்ணை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், தனது மனைவியை தாக்கிய நபரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லவும் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam

அந்தரத்தில் பறந்தபடி என்னோடு நீ இருந்தால் பாடல் பாடி அசத்திய ஷிவானி.. சரிகமப சீசன் 5ல் அசந்துபோன நடுவர்கள் Cineulagam
