பாரியளவு தொகை உலர்ந்த இஞ்சியுடன் நபரொருவர் கைது
கடல்வழியாக சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட பாரியளவு தொகை உலர்ந்த இஞ்சியுடன் சந்தேக நபரொவருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருடன் இணைந்து இலங்கை கடற்படையினர் நேற்று (19) நுரைச்சோலை சஞ்சீதவத்தை பகுதியில் மேற்கொண்ட விசேட கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த இஞ்சி தொகையுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விசேட கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான ஒரு வீடு சோதனையிடப்பட்டுள்ளது.
மேலதிக சட்ட நடவடிக்கை
அதன் போது, கடல் வழியாக சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 2,828 கிலோகிராம் எடை கொண்ட உலர்ந்த இஞ்சி 70 பொதிகளில் அடைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அதனை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நுரைச்சோலையில் வசிக்கும் 33 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட உலரந்த இஞ்சி பொட்டலங்களுடன் சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நுரைச்சோலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




