புத்தளத்தில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது (Photos)
புத்தளத்தில் கேரளா கஞ்சா பொதியுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் சமகிமாவத்த பகுதியில் நேற்று (02.02.2023) பொலிஸ் போதை தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் போதைத் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய வீடொன்றை முற்றுகையிட்டு சோதனைகளை மேற்கொண்டபோது கேரளா கஞ்சாப் பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இதன்போது தெரிவித்துள்ளனர்.

நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை
மேலும், கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சா 3 கிலோகிராம் 800 கிராம் எடையுடையது எனவும் இதன் பெறுமதி சுமார் 7 இலட்சம் ரூபா என மதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் போதைத் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் புத்தளம் சமகிமாவத்தைப் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட கஞ்சாப்பொதிகள் புத்தளம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் போதைத் தடுப்புப் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவுமு் தெரிவித்துள்ளனர்.



விறுவிறுப்பாக11 மணிநேரம் நடைபெற்ற வாக்குப்பதிவு! ஆறு மணி கடந்து வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam