வெள்ளவத்தையில் பெருந்தொகை போலி டொலர்களுடன் சிக்கிய தமிழ் குடும்பஸ்தர்
கொழும்பு, வெள்ளவத்தையில் போலி அமெரிக்க டொலர் நாணயத்தாள்களுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
சந்தேகநபரிடமிருந்து 453 போலி அமெரிக்க டொலர் நாணயத்தாள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் போலி நாணயம் தொடர்பான பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய, வெள்ளவத்தை பகுதியில் தற்காலிக தங்குமிடங்களை வழங்கும் இடமொன்றை சுற்றிவளைத்து சோதனை மேற்கொள்ளப்பட்டது.
போலி டொலர்
இதன்போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபருக்கு இந்த போலி டொலர் எவ்வாறு கிடைத்தன, மற்றும் இந்த நாணயங்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதா என்பது குறித்து விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 43 வயதுடைய சந்தேகநபர் தலவாக்கலை பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.