முல்லைத்தீவில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த இளைஞன் கைது
முல்லைத்தீவு, புத்துவெட்டுவான் கிராமத்தில் 14 வயது சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புத்துவெட்டுவான் கிராமத்தில் சிறுமி ஒருவருடன் நீண்ட நாட்களாகப் பழகிவந்த 26 வயதுடைய இளைஞன் ஒருவர் கடந்த 5ஆம் திகதி குறித்த சிறுமி வீட்டில் தனிமையிலிருந்த சந்தர்ப்பத்தில் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் அயலவர்களுக்குத் தெரியவந்துள்ளதைத் தொடர்ந்து கிராமத்தின் சமூக அமைப்புக்களால் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, குறித்த இளைஞன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஐயன்கன் குளம் பொலிஸ் பிரிவில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

சீனா மீது திரும்பிய ட்ரம்பின் கோபம்... ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு ரத்தாகும் என மிரட்டல் News Lankasri

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam
