சட்டவிரோதமான முறையில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது
மாந்தை கிழக்கு நட்டாங்கண்டல் பகுதியில் சட்டவிரோதமாக மதுபானங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும் தொடர்ச்சியாக ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருக்கும் வேளையில் மதுபானம் விற்பனை செய்த குற்றச்சாட்டில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
நட்டாங்கண்டல் பகுதியை சேர்ந்த 52 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
நட்டாங்கண்டல் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விமல வீரவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின்படி மதுபானங்களை விற்கும் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.