வவுனியாவில் வெளிநாடு அனுப்புவதாக கூறி மோசடி செய்த நபர் கைது
வவுனியா- நெடுங்கேணி பகுதியில் வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி பணமோசடி செய்த சந்தேகநபர் ஒருவரை நெடுங்கேணி பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் வெளிநாடுகளுக்கு வேளையாட்களை அனுப்புவதாக கூறி நெடுங்கேணி பகுதியை சேர்ந்த சிலரிடம் பணத்தினை பெற்றுள்ளார்.
மீள வழங்கப்படாமை
எனினும் நீண்ட நாட்களாகியும் வெளிநாட்டிற்கு அனுப்பாமையினால் பணத்தை வழங்கிய நபர்கள் அதனை மீளத்தருமாறு கோரியிருந்தும் சந்தேகநபரினால் பணம் மீள வழங்கப்படவில்லை.
இதனால் பாதிக்கப்பட்டவர்களால் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான்
உத்தரவிட்டுள்ளார்.