புத்தளத்தில் வெளிநாட்டு புகையிலையுடன் சிக்கிய நபர்
புத்தளம் (Puttalam) - நாகவில்லு பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக வெளிநாட்டு புகையிலைகளை கொண்டு செல்ல முயற்சித்த சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று (04.05.2024) புத்தளம் போக்குவரத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய புத்தளம், பாலாவி பகுதியில் வைத்து மோட்டார்சைக்கிள் ஒன்று தடுத்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இதன்போது, 4 பொதிகள் அடங்கிய 40 பெட்டிகளில் 800 வெளிநாட்டு புகையிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதேவேளை, கைப்பற்றப்பட்ட புகையிலை, பெட்டிகள் மற்றும் கொண்டு
செல்ல பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஆகியன புத்தளம் பொலிஸ் நிலையத்தில்
ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மேலும், இது குறித்த மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam